×

காஷ்மீரில் பரபரப்பு: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பொதுமக்கள் பலி..!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே 3 வீடுகளுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சித்ரா பகுதியில் டிச.28ல் என்கவுன்ட்டரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட  4 தீவிரவாதிகளிடம் இருந்தும் 7 ஏகே ரக துப்பாக்கிகள், ஒரு எம்4 ரக துப்பாக்கி, 3 பிஸ்டல், ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய பயங்கரவாதியை தீவிரமாக தேசி வந்தனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே 3 வீடுகளுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். மேல் டாங்கிரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்கல் சம்பவத்தால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தகப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் பரபரப்பு வருகிறது. …

The post காஷ்மீரில் பரபரப்பு: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பொதுமக்கள் பலி..! appeared first on Dinakaran.

Tags : Srinagar ,Rajouri ,Jammu ,Kashmir ,Jammu-Kashmir ,
× RELATED மோசமான வானிலை : அனந்தநாக் – ரஜோரி தேர்தல் தேதி மாற்றம்